Friday 3 May 2024

இன்றைய ராசிபலன் - 03.05.2024..!!!

இன்றைய ராசிபலன் - 03.05.2024..!!!

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கப் போகின்றது. தொழிலில் புதியதாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுடை செய்யலாம். லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சக ஊழியர்களின் நட்பு உதவியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆசைப்பட்டு, உங்களுக்கு பிடித்த நிறைய விஷயங்களை செய்யப் போகிறீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள், அவர்களுக்கு மனதிற்கு பிடித்தபடி அமையும். விடுமுறை நாட்களை பயனுள்ளபடி அமைத்துக் கொள்வீர்கள். வீட்டில் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக தான் இருக்கும். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். நீங்களும் திறமைசாலிகள் தான் என்று நிரூபிப்பீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் கூடுமானவரை முதலீட்டில் கவனமாக இருங்க. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முழுக்க முழுக்க பாட்னரை நம்பாதீங்க.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நட்பு வட்டாரத்தில் நிறைய நல்லது நடக்கும். புதிய நண்பர்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சுமூகமான போக்கே நிலவும். வியாபாரத்தில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் அதையே நினைத்து சோர்ந்து போய் உட்காராதிங்க. பிரச்சனையை தூக்கி ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணாக்கினால் பின்பு உங்களுக்கு தான் பிரச்சனை பார்த்துக்கோங்க.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிறைய ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். எதற்குமே உதவாது என்று தூக்கிப் போட்ட ஒரு விஷயத்தை கூட அனைவருக்கும் பயன்படும் படி மாற்றுவீர்கள். அந்த அளவுக்கு உங்களுடைய திறமை வெளிப்படும். சிந்தனை ஆக்கப்பூர்வமாக இருக்கும். இதனால் பாராட்டுகளும் கிடைக்கும். குறிப்பாக மெக்கானிக்கல் தொழிலில் இருப்பவர்கள் ஆராய்ச்சி சம்பந்தமான வேலையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்று கூடுதல் நன்மை கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனது சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும். இன்பமான செய்திகள் தொலைபேசி மூலம் வரும். அது உங்கள் பிரமோஷன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். அல்லது குடும்ப சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஏதோ ஒன்று உங்களுக்கு இனிப்பான இன்பத்தை கொடுக்கும். பெரியவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். கடவுளின் பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கு.

துலாம்


துலாம் ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவுதான் அலைச்சல் இருந்தாலும் உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடிக்கிற வெயிலில் வெளியே போக சொன்னாலும் அந்த வேலையை சரியாக முடித்துவிட்டு வருவீர்கள். இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலுக்கு சூடு தரும் பொருளை சாப்பிட வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். சின்ன சின்ன தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுப காரிய நிகழ்ச்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேளையில் மட்டும் இன்று கவனம் செலுத்துங்கள். உங்களுடைய பிள்ளைகளின் ஆரோக்கியத்தின் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளை அனாவசியமாக வெயிலில் அனுப்ப வேண்டாம். மருத்துவ செலவு வீண் விரைய செலவு ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையா இருங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். யார் வம்பு தும்புக்கும் போக மாட்டீர்கள். ஆனால் பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். அதை சமாளிக்க கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் முன்கோபடாமல் டென்ஷன் ஆகாமல் ஒரு பிரச்சினையை சமாளிக்கும் வித்தையை இன்று நீங்கள் கையாளுவீர்கள். உங்களுக்கு பொறுமைசாலி என்ற பட்டமே கொடுக்கலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிரிகளிடம் போராடியே இன்றைய நாள் முடிந்து விடும். ஆனால் ஒன்று. நல்ல அனுபவம் கிடைக்கும். யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் கஷ்டம் வரும்போது தான் நம் கூட இருக்கிறவங்களை பத்தி நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த அனுபவங்கள் இன்று உங்களுக்கு கிடைக்கலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் வந்த சிக்கல்கள் விலகும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு, பார்ட்னர்களை ஒரு முடிவை தேடி தந்து விடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை வேலை என்று இருக்காமல் கொஞ்சம் குடும்பத்தையும் பார்க்கவும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று அவசியம் பொறுமை காக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் முன் கோபப்படக்கூடாது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். விதாண்டா வாதம் செய்யக்கூடாது. விவாதம் செய்யக்கூடாது. சரி சரி என்று தலையாட்டிக் கொண்டு உங்கள் வேலையை கவனமாக செய்தாலே போதும். இறை நம்பிக்கையை கைவிட வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

Thursday 2 May 2024

இன்றைய ராசிபலன் - 02.05.2024..!!!

இன்றைய ராசிபலன் - 02.05.2024..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வந்தாலும், தொழிலில் பிரச்சனை வந்தாலும், சொந்த பந்தங்களுக்கு இடையே பிரச்சனை வந்தாலும் நிதானமாக யோசிக்கவும். முன் கோபத்தை காட்டாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடுவது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கைகூடி வரும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் மீண்டும் தொடங்கும். காதல் கைகூடும். சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு ஒன்று சேருவீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். தொழிலில் புதிய முதலீட்டின் போது கவனமாக இருக்கவும். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு என்று நினைத்தது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பள உயர்வும் சில பேருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்களே நம்ப முடியாத நல்ல விஷயங்கள் நடக்கும். சில பேருக்கு எதிர்பாராமல் வரும் பரிசுப் பொருட்களின் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சில பேர் இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிக்கள் பிடுங்கள் இருக்கும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கவே முடியாது. எதிரிகள் உங்களோடு போட்டி போட்டு பிரச்சனைகளை உண்டாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். இன்று நிறைய குள்ளநரி வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேறு வழி இல்லை உங்களை காப்பாற்றிக் கொள்ள எதையாவது செய்து தான் ஆக வேண்டும்.


கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் நன்மை நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். முதலீடு செய்வதற்கு தேவையான கடன் தொகையும் சரியான நேரத்தில் கிடைக்கும். தாய் மாமன் உறவால் ஆதாயம் உண்டு. வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக செய்ய முடியாத காரியங்களை இன்று கையில் எடுத்தால் சுலபமாக செய்து முடிப்பீர்கள். யோகம் நிறைந்த நாளாக இருக்கும். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவும். அனாவசியமாக அடுத்தவர்களை உசுப்பேத்தும் படி கமெண்ட் பண்ணாதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நிறைய வேலை இருக்கலாம், நீங்கள் செய்யும் தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். ஆனாலும் எல்லாவற்றையும் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, நிம்மதியாக இருப்பீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதையும் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை இருக்கக் கூடாது. உங்களுக்கு கிடைத்ததை வைத்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களுடைய வாழ்க்கையையும் நிலைகுலைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். ஆடம்பர செலவு பக்கம் போகவே கூடாது. மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் பிரச்சனையில் இருந்து வெளி வருவீர்கள். அடுத்தவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்யும் அளவுக்கு உங்களிடம் நிதி நிலைமை உயர்ந்து இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதையும் உயரும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வரும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த விஷயத்திலும் பொய் சொல்லி சமாளிக்காதீர்கள். பிரச்சனை வந்தாலும் உண்மையை சொல்லுவது தான் நல்லது. மற்றபடி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். புதிய முதலீட்டை செய்யலாம். புதிய நண்பர்களின் சந்திப்பு நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். மேலதிகாரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நல்ல நாளாக இருக்கும்.

Wednesday 1 May 2024

மீண்டும் மின் கட்டணம் குறைப்பு?

மீண்டும் மின் கட்டணம் குறைப்பு?




மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனை தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

மே மாதத்தில் மற்றுமொரு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதுவரை திரட்டிய தரவுகளை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
குரு பெயர்ச்சி ராஜயோகம் ; இந்த 4 ராசியினருக்கு ; அமர்க்களமான வாழ்க்கை..!!!

குரு பெயர்ச்சி ராஜயோகம் ; இந்த 4 ராசியினருக்கு ; அமர்க்களமான வாழ்க்கை..!!!


தேவர்களின் குருவான வியாழன் மே 1, 2024 அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறப் போகிறார். இந்த நிகழ்வானது மதியம் 1:01 மணிக்கு ரிஷப ராசியில் நடைபெறும்.

இது சித்திரை மாதத்தின் மிகப் பெரிய பெயர்ச்சியில் அனைத்து 12 ராசிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும். ஆனால் இந்த பெயர்ச்சியின் போது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகாரர்கள் யார் என பார்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். தொழிலில் பல அற்புதமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையின் அடிப்படையில் இந்த பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நீங்கள் அரசு வேலைக்குத் தயாராகி இருந்தால், இந்தப் பயணத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உறவில் இனிமை இருக்கும். இந்த பெயர்ச்சி மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

குரு பகவானின் அருள் பெற, குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
சீமெந்தின் விலை குறைப்பு..!!!

சீமெந்தின் விலை குறைப்பு..!!!


இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை திருத்தத்தின் படி சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாகும் என சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
யாழில் ஹயஸ் - லாண்ட்மாஸ்டர் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு ; ஐவர் படுகாயம்..!!!

யாழில் ஹயஸ் - லாண்ட்மாஸ்டர் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு ; ஐவர் படுகாயம்..!!!


யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் நுணாவில் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் லாண்ட் மாஸ்ரரில் பயணித்த ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிறுமி மற்றும் லாண்ட் மாஸ்ரர் சாரதி ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் சாரதி முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் பின்னால் சென்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.