Friday 3 May 2024

100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகம்: பண மழையில் நனையும் ராசிகள்..!!!

100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகம்: பண மழையில் நனையும் ராசிகள்..!!!


ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளானது சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாளானது பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாளாகும். இந்த நாள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு உகந்த மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது மே 10 ஆம் தேதி வருகிறது.

வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் ஒரு மங்களகரமான ராஜயோகமாகும்.

இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. பணம் தேடி வரப்போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.



சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.


மேஷம்

அட்சய திருதியை நாளில் மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கடகம்

அட்சய திருதியை நாளில் கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
வெளியானது யாழ்ப்பாணம் - இந்தியா கப்பல் சேவை கட்டணம்..!!!

வெளியானது யாழ்ப்பாணம் - இந்தியா கப்பல் சேவை கட்டணம்..!!!



காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது படகுசேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் தொடரவுள்ளது.

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக 'சிவகங்கை' எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.

150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது.

இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும்.

மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன.

இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகைப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாதந்தோறும் 72இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல்சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.
இரத்தகாயங்களுடன் கணவனின் சடலம் மீட்பு ; மனைவி உயிர்மாய்ப்பு..!!!

இரத்தகாயங்களுடன் கணவனின் சடலம் மீட்பு ; மனைவி உயிர்மாய்ப்பு..!!!



வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சம்பவத்தில் கீரிசுட்டான் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான லோகநாதன் வயது 47 மற்றும் அவரது மனைவியான லோகநாதன் பரமேஸ்வரி வயது 37 ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.


குறித்த இருவரும் முரண்பாடு காரணமாக சிலகாலங்கள் பிரிந்திருந்ததாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கணவனின் தலையில் இரத்தக்காயம் இருக்கும் நிலையில் இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரபல வைத்திய நிபுணர் இடமாற்றம்..!!!

பிரபல வைத்திய நிபுணர் இடமாற்றம்..!!!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் A.சிறீதரன் இன்று முதல் இடமாற்றம் பெற்று கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு செல்கின்றார்.

இதேசமயம் மகப்பேற்று வைத்திய நிபுணர் J.கஜேந்திரன் புதிதாக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.


எனவே இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் A.சிறீதரனின் பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் S.சிறீசரவணபவா பொறுப்பேற்கவுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் S.சிறீசரவணபவா பொறுப்பில் இருந்த விடுதியையும் அவருடைய கிளினிக் நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் J.கஜேந்திரன் பொறுப்பேற்கவுள்ளார்.

வைத்திய நிபுணர் சிறிதரன் கடந்த 18 வருடங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு..!!!

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு..!!!


இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது.

2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740.
இன்றைய ராசிபலன் - 03.05.2024..!!!

இன்றைய ராசிபலன் - 03.05.2024..!!!

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கப் போகின்றது. தொழிலில் புதியதாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுடை செய்யலாம். லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சக ஊழியர்களின் நட்பு உதவியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆசைப்பட்டு, உங்களுக்கு பிடித்த நிறைய விஷயங்களை செய்யப் போகிறீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள், அவர்களுக்கு மனதிற்கு பிடித்தபடி அமையும். விடுமுறை நாட்களை பயனுள்ளபடி அமைத்துக் கொள்வீர்கள். வீட்டில் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக தான் இருக்கும். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். நீங்களும் திறமைசாலிகள் தான் என்று நிரூபிப்பீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் கூடுமானவரை முதலீட்டில் கவனமாக இருங்க. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முழுக்க முழுக்க பாட்னரை நம்பாதீங்க.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நட்பு வட்டாரத்தில் நிறைய நல்லது நடக்கும். புதிய நண்பர்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சுமூகமான போக்கே நிலவும். வியாபாரத்தில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் அதையே நினைத்து சோர்ந்து போய் உட்காராதிங்க. பிரச்சனையை தூக்கி ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணாக்கினால் பின்பு உங்களுக்கு தான் பிரச்சனை பார்த்துக்கோங்க.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிறைய ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். எதற்குமே உதவாது என்று தூக்கிப் போட்ட ஒரு விஷயத்தை கூட அனைவருக்கும் பயன்படும் படி மாற்றுவீர்கள். அந்த அளவுக்கு உங்களுடைய திறமை வெளிப்படும். சிந்தனை ஆக்கப்பூர்வமாக இருக்கும். இதனால் பாராட்டுகளும் கிடைக்கும். குறிப்பாக மெக்கானிக்கல் தொழிலில் இருப்பவர்கள் ஆராய்ச்சி சம்பந்தமான வேலையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்று கூடுதல் நன்மை கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனது சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும். இன்பமான செய்திகள் தொலைபேசி மூலம் வரும். அது உங்கள் பிரமோஷன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். அல்லது குடும்ப சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஏதோ ஒன்று உங்களுக்கு இனிப்பான இன்பத்தை கொடுக்கும். பெரியவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். கடவுளின் பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கு.

துலாம்


துலாம் ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவுதான் அலைச்சல் இருந்தாலும் உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடிக்கிற வெயிலில் வெளியே போக சொன்னாலும் அந்த வேலையை சரியாக முடித்துவிட்டு வருவீர்கள். இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலுக்கு சூடு தரும் பொருளை சாப்பிட வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். சின்ன சின்ன தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுப காரிய நிகழ்ச்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேளையில் மட்டும் இன்று கவனம் செலுத்துங்கள். உங்களுடைய பிள்ளைகளின் ஆரோக்கியத்தின் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளை அனாவசியமாக வெயிலில் அனுப்ப வேண்டாம். மருத்துவ செலவு வீண் விரைய செலவு ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையா இருங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். யார் வம்பு தும்புக்கும் போக மாட்டீர்கள். ஆனால் பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். அதை சமாளிக்க கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் முன்கோபடாமல் டென்ஷன் ஆகாமல் ஒரு பிரச்சினையை சமாளிக்கும் வித்தையை இன்று நீங்கள் கையாளுவீர்கள். உங்களுக்கு பொறுமைசாலி என்ற பட்டமே கொடுக்கலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிரிகளிடம் போராடியே இன்றைய நாள் முடிந்து விடும். ஆனால் ஒன்று. நல்ல அனுபவம் கிடைக்கும். யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் கஷ்டம் வரும்போது தான் நம் கூட இருக்கிறவங்களை பத்தி நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த அனுபவங்கள் இன்று உங்களுக்கு கிடைக்கலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் வந்த சிக்கல்கள் விலகும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு, பார்ட்னர்களை ஒரு முடிவை தேடி தந்து விடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை வேலை என்று இருக்காமல் கொஞ்சம் குடும்பத்தையும் பார்க்கவும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று அவசியம் பொறுமை காக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் முன் கோபப்படக்கூடாது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். விதாண்டா வாதம் செய்யக்கூடாது. விவாதம் செய்யக்கூடாது. சரி சரி என்று தலையாட்டிக் கொண்டு உங்கள் வேலையை கவனமாக செய்தாலே போதும். இறை நம்பிக்கையை கைவிட வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.